மீன்பிடி துறைமுகக் கடற்கரையில் குளித்தபோது பரிதாபம்.! அலையில் சிக்கி 2 சிறுவர்கள் உயிரிழப்பு..! - Seithipunal
Seithipunal


விசாகப்பட்டினத்தில் மீன்பிடி துறைமுகக் கடற்கரையில் குளிக்க சென்ற இரண்டு சிறுவர்கள் அலையில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஆந்திர பிரதேசம் மாநிலம் விசாகப்பட்டினம் மீன்பிடி துறைமுக கடற்கரையில் நேற்று மாலை மூன்று சிறுவர்கள் குளிக்கச் சென்றுள்ளனர். அப்பொழுது சிறுவர்கள் குளித்துக் கொண்டிருந்தபோது திடீரென ஏற்பட்ட பெரிய அலையில் இரண்டு சிறுவர்கள் சிக்கிக் கொண்டுள்ளனர். இதில் தலாய் இஷாந்த் என்ற 14 வயது சிறுவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளான்.

இதையடுத்து மற்றொரு சிறுவன் சத்ய ஷியாம குமார்(15) மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். ஆனால் அங்கு சிகிச்சையின் போது சத்ய ஷியாம குமார் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

2 boys drowned in waves at fishing harbor beach in Visakhapatnam


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->