பெங்களூரு : குளத்தில் குளிக்கச் சென்ற 2 சிறுவர்கள் நீரில் மூழ்கி பலி.!
2 boys drowned in the pond in bangalore
கர்நாடகா மாநிலத்தில் நண்பர்களுடன் குளத்தில் குளிக்கச் சென்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூரு சென்னராயப்பட்டணா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள மொரார்ஜி தேசாய் பள்ளியில் ஜூனைத் பாஷா(14) என்ற சிறுவன் விடுதியில் தங்கி படித்து வந்தான். இந்நிலையில் நேற்று முன்தினம் பாஷா தன் நண்பர்களுடன் குளிப்பதற்காக விடுதி அருகே உள்ள குளத்திற்கு சென்றுள்ளான்.
அப்பொழுது பாஷா மற்றும் சந்தோஷ் (14) என்ற இரண்டு மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். இதை எடுத்தது இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் பாஷாவின் உடலை கைப்பற்றினர்.
இதைத்தொடர்ந்து தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டு நேற்று காலை சந்தோஷின் உடலை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். மேலும் இவர்கள் இரண்டு பேரும் குளத்தில் ஆழமான பகுதிகளுக்கு சென்றதால் நீச்சல் தெரியாமல் நீரில் மூழ்கி உயிரிழந்தது தெரிய வந்துள்ளது. இதையடுத்து போலீசார் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
2 boys drowned in the pond in bangalore