காணாமல் போன 19 வயது மாணவன் சடலமாக மீட்பு.!! - Seithipunal
Seithipunal


மத்திய பிரதேசத்தை சேர்ந்த ரசித் சந்தியா என்ற மாணவன் ராஜஸ்தான் மாநிலம் கோட்டை நகரில் செயல்பட்டு வந்த விடுதியில் ஒன்றில் தங்கி கல்வி‌ பயின்று வந்துள்ளார். இவர் கடந்த பிப்ரவரி 11ஆம் தேதி முதல் விடுதி திரும்பவில்லை. அதன் அடிப்படையில் வடுதி‌ சார்பில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

போலிசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் கடைசியாக மாணவன் விடுதியில் இருந்து கோச்சிங் சென்டர் புறப்பட்டு சென்றதாக கூறப்பட்டது. இதை அடுத்து அவரை தேடும் பணியில் அப்பகுதி போலீசார் ஈடுபடுத்தி இருந்தனர். அப்போது விடுதி அருகே சோதனை மேற்கொண்டதில் கோயிலுக்கு போவதாக எழுதப்பட்டிருந்த ஒரு குறிப்பை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.

மேலும் அப்பகுதியில் செயல்பட்டு வந்த சிசிடிவி காட்சிகளை சோதனை செய்து பார்த்ததில் ரசித்த கோவில் பகுதிக்கு வண்டி எடுத்துச் சென்றதும், பிறகு அருகில் உள்ள வனப்பகுதியில் நுழையும் காட்சிகளும் பதிவாகி இருந்தது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலிசார் மாணவனின் பை, மொபைல் போன், அரை சாவி மற்றும் இதர பொருட்கள் கோவில் அருகிலும், மாணவனின் உடலை மீட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

19 year old student body found near Rajasthan forest


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->