ஊரடங்கிய நேரத்தில், அடங்காத சிறுவன் செய்த காரியம்.! 4 மாத கற்பமாகிய சிறுமி.!
16 years boy rapped 14 years girl in uttar predesh
உத்திரப்பிரதேச மாநிலத்தில் இருக்கும் கான்பூரில் 16 வயது சிறுவன், பக்கத்து வீட்டு 14 வயது சிறுமியை நான்கு மாதகாலமாக பாலியல் வன்கொடுமை செய்ததை தொடர்ந்து அந்த பெண் கர்ப்பமாக இருப்பது உறுதியாகியுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினர் காவல் நிலையத்திற்கு சென்று அந்த சிறுவன் மீது புகார் அளித்து இருக்கின்றனர். இச்சம்பவம், குறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் 16 வயது மைனர் சிறுவன் அவருக்குப் பக்கத்து வீட்டில் வசிக்கும் பாதிக்கப்பட்ட பெண்ணான 14 வயது சிறுமியை பல மாதமாக பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார்.
சமீபத்தில் அந்த சிறுமிக்கு கடுமையான வயிற்றுவலி ஏற்பட்டது. அவருடைய வீட்டில் இருந்தவர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கே வயிற்றுவலிக்கு பரிசோதனை செய்தபோது அவர் கர்ப்பமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனை கேட்டு மிகுந்த அதிர்ச்சி அடைந்த அந்த பெண்ணின் பெற்றோர் சிறுமியிடம் விசாரணை நடத்தியதில் பக்கத்து வீட்டில் இளைஞர் அவரை கற்பழித்து வந்தது குறித்து கூறியுள்ளார். இதனால், அந்தப் பெண்ணுடன் காவல் நிலையத்திற்கு வந்து சிறுமியின் பெற்றோர் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் பேரில் 16 வயது சிறுவனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
English Summary
16 years boy rapped 14 years girl in uttar predesh