அசாமில் கனமழை.. மின்னல் தாக்கியதில் 14 பேர் பலி.!
14 killed in lightning strike in Assam
வடகிழக்கு மாநிலங்களான அருணாச்சல பிரதேசம், அசாம், சிக்கிம், மேகாலயா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் அடுத்த சில நாட்களுக்கு கனமழை தொடரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
மேலும், அசாம், அருணாச்சலப்பிரதேசம், மேகலாயா ஆகிய மாநிலங்களுக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் அசாம் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் கன மழையால், திப்ரூகர், பர்பேட்டா, கோல்பாரா உள்ளிட்ட மாவட்டங்களில் மின்னல் தாக்கியதில் இரண்டு சிறுவர்கள் உட்பட 8 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
மேலும் அசாமில் பெய்த கனமழை, புயல் மற்றும் மின்னல் தாக்கியதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது என பேரிடர் மீட்பு குழுவினர் தெரிவித்துள்ளனர்.
English Summary
14 killed in lightning strike in Assam