மத்திய பிரதேசத்தில் கோர விபத்து: பேருந்தும், காரும் மோதியதில் 11 பேர் உடல் நசுங்கி பலி.! - Seithipunal
Seithipunal


மத்திய பிரதேசத்தில் பேருந்தும், காரும் மோதிய கோர விபத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

மத்தியப் பிரதேசம் மாநிலம் போபால் மாவட்டத்தில் உள்ள பெதுல் என்ற பகுதியில் ஜல்லார் காவல் நிலையம் அருகே அதிகாலை 2 மணி அளவில் பேருந்தும், காரும் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. 

இந்த பயங்கர விபத்தில் 11 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்துள்ளனர். இதையழுத்து விபத்து குறித்து தகவல் அறிந்து விரைந்த போலீசார் மீட்பு குழுவினரின் உதவியுடன் விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

அதிகாலை 2 மணியளவில் நடந்த இந்த விபத்தில் ஆறு ஆண்கள், மூன்று பெண்கள், ஐந்து வயதுடைய ஒரு சிறுமி மற்றும் ஒரு குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்றும், இறந்தவர்களில் சில தொழிலாளர்கள் அண்டை மாநிலமான மகாராஷ்டிராவில் உள்ள அமராவதியிலிருந்து இங்கு வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தவர்கள் என்று காவல்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த விபத்திற்கான காரணம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

11 killed in Bus car collision in madhya pradesh


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->