#BREAKING || தீயாய் பரவும் கொரோனா.! 10 ஆயிரத்தை தாண்டிய தினசரி பாதிப்பு..! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 10158 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இந்தியாவில் கடந்த 2020ஆம் ஆண்டு பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ், கடந்த சில நாட்களாக மீண்டும் தீயாய் பரவ தொடங்கியுள்ளது. இதனால் இந்தியா முழுவதும் நாள்தோறும் கணிசமான எண்ணிக்கையில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதில் கொரோனா பரவல் அதிகம் உள்ள மாநிலங்களில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் நேற்று ஒரே நாளில் இந்தியாவில் 7,830 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 10,158 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது நேற்றையதை விட 30% அதிகமாகும். இதன்மூலம் இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 44,998ஆக உயர்ந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

10158 new Covid cases in the last 24 hours in india


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->