ஆபரேஷன் சிந்தூர்: இந்தியா அதி இடங்களில் தாக்குதல் நடத்தியது: ஒப்புக் கொண்ட பாகிஸ்தான்..!
Pakistan admits that India attacked their country in several place
பாகிஸ்தானில் அதிக இடங்களில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளமை அந்நாடு வெளியிட்ட ஆவணங்கள் மூலம் தெரியவந்துள்ளது. பஹல்காம் தாக்குதலுக்கு 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை மூலம் இந்திய ராணுவம் பதிலடி கொடுத்தது. பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்படும் பயங்கரவாத முகாம்களை குறிவைத்து மட்டுமே இந்தியா தாக்குதல் நடத்தியது.
ஆனால், பாகிஸ்தான் ராணுவம், நமது நாட்டு அப்பாவி மக்கள் வசிக்கும் பகுதிகள் மற்றும் ராணுவ நிலைகள் மீது ட்ரோன்களை வீசி பதிலடி கொடுத்தது. இந்த தாக்குதலை இந்திய பாதுகாப்புப் படையினர் முறியடித்தனர். இதனைத் தொடர்ந்து, அந்நாட்டு விமானப்படை தளங்கள் மீது நடத்தப்பட்ட அதிரடி தாக்குதல் காரணமாக, அங்கு பலத்த சேதம் ஏற்படவே, போரை நிறுத்தும்படி பாகிஸ்தான் கெஞ்சியதால் போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது.

இந்நிலையில் பாகிஸ்தான் தாக்குதல் குறித்து அந்நாட்டில் ஆதாரங்கள் வெளியாகியுள்ளன. அதில், தாக்குதல் நடத்தியதாக இந்திய ராணுவம் கூறிய இடங்களை விட கூடுதலாக 07 இடங்களில் தாக்குதல் நடத்தப்பட்டது தெரியவந்துள்ளது. பெஷாவர், ஜங், சிந்தில் உள்ள ஹைதராபாத், பாகிஸ்தானின் பஞ்சாப், பவல்நகர், அடோக் மற்றும் சோக் ஆகிய இடங்கள் சேதம் அடைந்துள்ளது.
ஆனால்,இந்திய ராணுவத்தினர் அளித்த பேட்டியில் இந்த இடங்கள் பற்றி குறிப்பிடப்படவில்லை. தற்போது பாகிஸ்தான் வெளியிட்ட ஆதாரங்கள் மூலம், அங்கு இந்தியா குறிப்பிட்டதை விட அதிக இடங்களில் தாக்குதல் நடத்தியமை தெரியவந்துள்ளது. இதனால் தன அச்சத்தில் போரை நிறுத்தும்படி பாகிஸ்தான் கெஞ்சியமை தெரியவந்துள்ளது.
English Summary
Pakistan admits that India attacked their country in several place