டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு கலந்தாய்வு தேதி அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


டி.என்.பி.எஸ்.சி குரூப்-1 தேர்வில் தகுதியான தேர்வர்களுக்கான கலந்தாய்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட்ட துணை ஆட்சியர், துணை போலீஸ் சூப்பிரண்டு, உதவி ஆணையாளர் (வணிகவரித்துறை), துணை பதிவாளர் (கூட்டுறவுத்துறை) உள்ளிட்ட 66 காலிப்பணியிடங்கள் நிரப்புவதற்கான குரூப்-1 தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியிடப்பட்டது. 

இந்த நிலையில், டி.என்.பி.எஸ்.சி குரூப்-1 பதவிக்கான தரவரிசை பட்டியல் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 

அதில் அனைத்து தேர்வர்களும் வரும் 29-ந் தேதி ஆணைக்குழு அலுவலகத்தில் காலை 11 மணிக்கு நடைபெற உள்ள கலந்தாய்வில் கலந்து கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

TNPSC Group-1 qualified candidates interview Date announced


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->