#திருவண்ணமலை:: அக்னி வீரர் பணிக்கு விண்ணப்பிக்க மார்ச்15 கடைசி நாள்..!! - Seithipunal
Seithipunal


சென்னை ராணுவ தலைமை ஆள்சேர்ப்பு இயக்குநர் கர்னல் மோனிஷ் குமார் பாத்ரே திருவண்ணாமலையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது பேசிய அவர் இந்திய ராணுவத்தில் அக்னிபத் திட்டத்தில் 17.5 வயது முதல் 21 வயது வரையுள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் சேரலாம்.

திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சென்னை, கடலூர், திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 11 மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர், இளம்பெண்கள் மார்ச் 15ம் தேதி வரை www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பதாரர் 2002 அக்டோபர் 1-ம் தேதி முதல் 2006 ஏப்ரல் 1-ம் தேதிக்குள் சிறப்பு தகுதிகளுக்கு போனஸ் மதிப்பெண் வழங்கப்படும். ராணுவ ஆள்சேர்ப்பு வெளிப்படைத்தன்மையுடன் நடைபெற கூடியது. தகுதி அடிப்படையில் தேர்வு நடைபெறும் என்பதால் யாரிடமும் லஞ்சம் கொடுத்து ஏமாற வேண்டாம். இடைத்தரகர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்" என செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

March 15 is the last date to apply for Agnipath job


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->