நான் அவளை பிடிக்க, அவள் என்னை பிடிக்க.. விக்னேஷ்- நயன் அலப்பறைகள்.!  - Seithipunal
Seithipunal


நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் நானும் ரவுடிதான் திரைப்படம் ஆரம்பத்திலிருந்து காதலித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் எப்போது திருமணம் செய்துகொள்வார்கள் என்பது சினிமா ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக இருந்தது. 

பல ஆண்டுகளாகவே இப்பொழுது, அப்பொழுது என்று தெரிவித்து வந்த நிலையில், இந்த ஆண்டு அவர்களது திருமணம் நடைபெற்றுள்ளது. கடந்த ஜூன் 9-ஆம் தேதி மகாபலிபுரத்தில் இருக்கும் ஒரு ஓட்டலில் திருமணம் நடைபெற்றது. 

மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்ற இந்த திருமணத்தில் வெறும் 200 பேர் மட்டுமே கலந்து கொண்டனர். திருமணம் முடிந்த கையோடு இருவரும் திருப்பதிக்கு சென்று தரிசித்து வந்தனர். பின்னர் சொந்த ஊருக்கு சென்று பெற்றோர்களிடம் ஆசி பெற்று வந்தனர். 

இந்நிலையில், இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நயன்தாரா தனது செல்போனில் புகைப்படம் எடுப்பதை போன்ற சில புகைப்படங்களை வெளியிட்டு அதில், "நான் அவளை படம் பிடிக்க, அவள் என்னை படம் பிடிக்க." என்று கவித்துவமாக எழுதி பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் தீயாக பரவி வருகின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vignesh and nayan photos story


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->