"கோமாளிங்க திருந்தவே மாட்டாங்க.." கஸ்தூரியை கண்டித்த வனிதா விஜயக்குமார்.!  - Seithipunal
Seithipunal


நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் சமீபத்தில் தான் திருமணம் செய்து கொண்டனர். திருமணம் ஆகி வெறும் 4 மாதங்கள் மட்டுமே முடிந்துள்ள நிலையில், விக்னேஷ் சிவன் தங்களுக்கு குழந்தை பிறந்ததாக சமூக வலைதள பக்கத்தில் அறிவித்தார். எப்படி குழந்தை பிறந்தது என்று கேள்வி எழுப்பிய நிலையில் அவர்கள் வாடகைத்தாய் மூலமாக குழந்தை பெற்றுக் கொண்டதாக கூறப்பட்டது.

ஆனால், இது குறித்த நயந்தாராவிடம் இருந்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இதனை தொடர்ஙு, நடிகை கஸ்தூரி தனது ட்விட்டர் பக்கத்தில் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்று கொள்வது குறித்து சில விதிமுறைகளை பதிவிட்டார். இந்த விதிமுறைகளை மீறி உள்ளதாக அவர் மறைமுகமாக குற்றம் சாட்டினார்.

இதுகுறித்து நடிகை வனிதா விஜயகுமார் கண்டனத்துடன் பதிவிட்டுள்ளார். அதில், "பெற்றோருக்கு அழகான இரண்டு குழந்தை பிறந்துள்ளது. அவர்களது வாழ்வின் முக்கியமான அழகான தருணங்களை கெடுக்காதீர்கள்.  இப்படி உணர்வுகளை கெடுப்பவர்கள் தான் சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும்.இப்படிப்பட்ட கோமாளிகள் திருந்தவே மாட்டார்கள். 

சட்டம் தெரியும் மருத்துவம் தெரியும் என்று பேட்டிக் கொடுத்தும், ட்வீட் போட்டும் அடுத்தவர்கள் மனதை நோகடிக்காதீர்கள். அனைத்தையும் கடவுள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார். அவர்களுக்கு தக்க தண்டனை கொடுப்பார். நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் குடும்பத்திற்கு கடவுள் ஆசிர்வாதம் எப்போதும் இருக்கும்." என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vantha Vijayakumar about kasthuri Tweet Of nayanthara Baby


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->