உன்னால் பரவசமானேன் மகளே.. மலையாள நடிகையை பாராட்டிய வைரமுத்து.!
vairamuthu wishes to samyuktha menon
சம்யுக்தா மேனன் மலையாள சினிமாவில் பிரபல நடிகையாக இருப்பவர். இவர் தனுஷ் நடிப்பில் வெளியாகியுள்ள வாத்தி திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். வரும் டிசம்பர் இரண்டாம் தேதி வாத்தி படம் ரிலீஸ் ஆக இருக்கிறது.
தற்போது சம்யுக்தா மேனன் பூமராங் என்ற மலையாள திரைப்படத்தில் நடித்து வருகின்றார். சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் அவர் பேசியபோது, "வைரமுத்துவின் வரியில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் வெளியாகின்ற பாடல்கள் எனக்கு மிகவும் பிடிக்கும்." என்று அவர் கூறியுள்ளார்.
இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. அந்த வீடியோவில், "வைரமுத்து எழுதிய பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம். வண்ணத்து பூச்சி உடம்பில் ஓவியங்கள் அதிசயம். என்ற பாடல் வரிகள் தனக்கு மிகவும் பிடிக்கும்." என்று மேற்கோள் காட்டி மிக அழகாக அவர் பேசினார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில், அதை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த வைரமுத்து, "மலையாளம் நனைந்த தமிழில் எனது பாட்டு வரிகளை நீ சொல்ல சொல்ல பரவசமானேன் மகளே. தமிழும், மலையாளமும் நமது உறவு மொழிகள். கலையால் ஒன்றுபடுவோம். காலத்தை வென்று விடுவோம்." என்று தெரிவித்துள்ளார்.
English Summary
vairamuthu wishes to samyuktha menon