பிரபல சீரியல் நடிகர் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு.! அதிர்ச்சியில் திரையுலகம்.!
tv actor ramesh dead
கேரள மாநிலத்தைச் சேர்ந்த பிரபல சீரியல் மற்றும் திரைப்பட நடிகர் ரமேஷ் வலியசாலா வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் திரையுலகினர் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.
54 வயதாகும் ரமேஷ் வலியசாலா சிறுவயது முதலே நாடகங்களில் நடித்து வருகிறார். இதன் காரணமாக அவர் கேரள மாநிலத்தில் ஒரு பிரபலமான நடிகராக வலம் வருகிறார். திருவனந்தபுரத்தில் அவரது இரண்டாவது மனைவி மற்றும் மகளுடன் சில ஆண்டுகளாக வசித்து வந்துள்ளார்.
கடந்த 22 ஆண்டுகளாக கேரள மாநிலத்தின் சீரியல் துறையில் தீவிரமாக பணியாற்றி வரும் ரமேஷ் வலியசாலா அரசு கல்லூரியில் பட்டப்படிப்பு படித்த போது, நாடகப் பின்னணியில் இருந்து தொலைக்காட்சி துறைக்கு வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், நேற்று காலை ஆறு முப்பது மணி அளவில் அவருடைய படுக்கையறையில் மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் ரமேஷ் வலியசாலா சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவரின் சடலத்தை கைப்பற்றிய போலீசார் இயற்கைக்கு மாறான மரணம் என வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் வெளியான தகவலின் படி, நோய்த்தொற்று ஊரடங்கு காரணமாக அவருக்கு பண நெருக்கடி இருந்ததாக சொல்லப்படுகிறது. நெருக்கடி காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டாரா என்ற சந்தேகம் போலீசாருக்கு ஏற்பட்டுள்ளது.
கேரளாவின் பிரபல சீரியல் நடிகர் ரமேஷ் வலியசாலா வீட்டில் சடலமாக மீட்கப்பட்டு இருப்பது அம்மாநில திரையுலகினரை அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது. அவரின் மறைவுக்குப் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.