19 வருட சினிமா வாழ்வில் முதல்முறையாக திரிஷா செய்யும் செயல்.! குவியும் வாழ்த்துக்கள்.!
Trisha as police
தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை திரிஷா. இவரை பற்றி ஏராளமான வதந்திகள், கிசுகிசுக்கள் அவ்வப்போது கிளம்பி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.தற்போதெல்லாம், நடிகை திரிஷா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிகவும் ஆக்டிவாக இருக்கின்றார்.
மேலும், அவர் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சைக்கிள் ஒட்டும்படி வெளியிட்டு இருந்த புகைப்படம் சர்ச்சைக்குள்ளானது குறிப்பிடத்தக்கது.
தற்போது இவர் மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் பகுதி 1, ஜீத்து ஜோசப் இயக்கத்தில் ராம், நிர்மல் குமார் இயக்கத்தில் சதுரங்க வேட்டை 2, ராஜூ இயக்கத்தில் ரம், சுந்தர் இயக்கத்தில் கர்ஜனை உள்ளிட்ட திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.
இந்நிலையில், நடிகை திரிஷா தற்போது பிருந்தா என்ற வெப்சீரிஸில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். இந்த தொடர் தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது. தெலுங்கில் தயாரிக்கப்படும் இந்த பட ஷூட்டிங்கின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களிலாகி வருகிறது.