ஆண்ட்ரியாவுக்கு மிரட்டல்! புத்தகத்தை வெளியிடாதற்கு, அந்த அரசியல்வாதி தான் காரணம்? - Seithipunal
Seithipunal


பெங்களூரில் நடைபெற்ற கவிதைப் போட்டி ஒன்றில் நடிகை ஆண்ட்ரியா கலந்து கொண்டுள்ளார். அப்போது, அவர் முறிந்த சிறகுகள் என்ற தலைப்பில் சில சோகமான கவிதைகளை வாசித்து இருக்கின்றார். இந்த கவிதைகள்  சோகத்தை வெளிப்படுத்தும் விதமாய் பார்வையாளர்களுக்கு தோன்றியுள்ளது. அப்போது ஆண்ட்ரியா நான் திருமணம் ஆன ஒருவருடன் உடல் ரீதியாக தொடர்பில் இருந்தேன். என்னை அவர் மனதளவில் காயப்படுத்தியுள்ளார். 

அந்த துன்பத்தில் இருந்து மீள முடியாமல் நான் திணறி கொண்டு இருந்த போதுதான் இந்த கவிதையை எழுதினேன். ஆயுர்வேத சிகிச்சைக்கும் இது தான் காரணம் என்று ஆண்ட்ரியா தெரிவித்தார். அந்த நபர் யார் என்று ரசிகர்கள் தொடர்ந்து கேட்டு வந்தனர். அதுகுறித்த முழுமையான தகவலை தான் "broken wings" புத்தகத்தில் குறிப்பிட்டிருப்பதாகவும், தங்களுக்குள் நடந்த அனைத்தும் தகவல்களும் அதில் இடம்பெறும் என்று குறிப்பிட்டிருந்தார். 

தற்போது ஆண்ட்ரியா தனது 'broken wings' புத்தகத்தை வருகிற 17ஆம் தேதியன்று சமூக வலைதளத்தில் வெளியிட இருப்பதாக கூறப்பட்டது. மேலும் அந்த நபர் நடிகராக இருந்து அரசியல்வாதியானவர் என்ற தகவல் தற்போது சினிமா வட்டாரங்களை அதிர வைத்துள்ளது.

இந்நிலையில் ஆண்ட்ரியாவிற்கு சில மர்ம நபர்கள் மிரட்டல் விடுவதாக தகவல் பரவி வருகிறது. இதற்கு காரணம் ஆண்ட்ரியா 'broken wings' புத்தகத்தில் குறிப்பிட்ட அந்த நபர் காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

threatening to andrea


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!


செய்திகள்



Seithipunal
--> -->