பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த பிறகு உருக்கமாக பேசிய தாமரை.! ஆறுதல் சொல்லும் ரசிகர்கள்.! - Seithipunal
Seithipunal


பிக்பாஸ் நிகழ்ச்சி எந்த மொழியில் வெளியாகினாலும் அதற்கு அந்தந்த மொழிகளில் நிறைய ரசிகர்கள் இருக்கின்றனர்.  அந்த வகையில் தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கும் நிறைய ரசிகர் கூட்டம் இருக்கிறது. அதனால்தான் வெற்றிகரமாக 4 சீசன்களை கடந்து பிக் பாஸ் 5 வது சீசனில் அடி எடுத்து வைத்துள்ளது. 

18 போட்டியாளர்கள் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் தற்போது பல்வேறு எலிமினேஷன்கள் நடைபெற்றது. மேலும், வைல்டு கார்டு எண்ட்ரீயும் நடைபெற்று வந்த நிலையில் இந்த நிகழ்ச்சி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கடந்த வாரம் தாமரைச்செல்வி எலிமினேட் செய்யப்பட்டார்.

தற்போது மொத்தம் 18 போட்டியாளர்கள் மற்றும் 2 வைல்ட் கார்ட் என்ட்ரி என 20 பேர் கலந்துக்கொண்ட போட்டியாளர்களில் தற்போது, ராஜு, பாவனி, நிரூப், ப்ரியங்கா, அமீர் உள்ளிட்ட 5 போட்டியாளர்கள் பிக்பாஸ் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

இந்த நிலையில் கடந்த வாரம் எலிமினேட் செய்யப்பட்ட தாமரைச்செல்வி லைவ் வீடியோவில் பேசியுள்ளார். அதில், "நான் எலிமினேஷன் ஆனதால் யாரும் கவலைப்பட வேண்டாம். நான் உங்கள் வீட்டுப் பிள்ளை. சிலர் எனக்காக சாப்பிடாமல் கொள்ளாமல் இருப்பது எனக்கு கஷ்டமாக உள்ளது என தெரிவித்துள்ளார். மேலும், இவ்வளவு நாட்கள் நான் பிக்பாஸ் வீட்டில் இருந்ததே நான் வெற்றி பெற்ற மாதிரி தான் எனவும் தெரிவித்துள்ளார்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thamarai selvi emotional speech


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->