அடித்து நொறுக்கப்பட்ட திரையரங்கம்.! உச்சகட்ட பதட்டம்.!
telungana theater broken fans
ஆந்திர திரையுலகின் முக்கிய நடிகர்களில் ஒருவர் பவன் கல்யாண். இவர் நடித்து வெளியான திரைப்படத்தின் முதல் காட்சியை திரையிடுவதில் இயந்திர கோளாறு ஏற்பட்டதால், திரையரங்கத்தை அடித்து நொறுக்கி உள்ள சம்பவம் அரங்கேறி உள்ளது.
ஆந்திர திரை உலகில் முக்கியமான நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் பவன்கல்யாண். இவருக்கு பெரும் ரசிகர் பட்டாளமே உள்ளது. அதே சமயத்தில் இவர் ஜன சேனா என்ற அரசியல் கட்சியைத் தொடங்கி பின்னர் பின்வாங்கியது குறிப்பிடத்தக்கது.
தமிழில் நடிகர் அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிகர் பவன் கல்யாண் நடிப்பில் 'வக்கீல் சாப்' என்ற திரைப்படத்தின் முன்னோட்ட காட்சிகள் திரையரங்கில் பார்ப்பதற்காக ரசிகர்கள் குவிந்தனர்.
ஒரு திரைப்படத்தின் முன்னோட்ட காட்சிக்கு இவ்வளவு ரசிகர் கூட்டம் என்ற அளவுக்கு திரையரங்க உரிமையாளர்கள் அதிர்ந்து போயினர்.
இந்நிலையில், தெலுங்கானா மாநிலம் ஜோகுலம்பா கட்வா என்ற பகுதியில் அமைந்துள்ள திரையரங்கில் 'வக்கீல் சாப்' என்ற திரைப்படம் முதல் நாள் முதல் காட்சி வெளியாகியது. பவன் கல்யாண் நடிப்பில் கடந்த இரண்டு வருடங்கள் கழித்து வெளியாகும் முதல் படம் என்பதால், ஏகப்பட்ட ரசிகர்கள் இந்த திரைப்படத்தை பார்ப்பதற்காக குவிந்து இருந்தனர்.
ஆனால் நடிகர் பவன் கல்யாண் அறிமுகமாகும் அந்த காட்சி ஓடும் சமயத்தில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அந்த திரையரங்கில் படம் நிறுத்தப்பட்டது. அடுத்த கணமே ரசிகர்கள் கொந்தளித்து தங்கள் இருக்கைகளையும், கதவுகளையும் அடித்து நொறுக்க ஆரம்பித்தனர்.
மேலும், திரையரங்கு மீது ரசிகர்கள் கல்லெறிந்து தாக்குதல் நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதன் காரணமாக தியேட்டர் நாள் முழுவதும் மூடப்பட்டது. இதைக்குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
English Summary
telungana theater broken fans