பெரும் சோகத்தில் மூழ்கிய ரஜினி ரசிகர்கள்., வெளியான மரண செய்தி.! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவின் அபூர்வ ராகங்கள் என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் ரஜினிகாந்த். அதனைத்தொடர்ந்து குணச்சித்திர கதாபாத்திரங்கள் மற்றும் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து வந்தார்.

அதன் பிறகு ரஜினியின் நெருங்கிய நண்பரான நடிகர் கமலின் அறிவுரையின்படி ரஜினி ஹீரோவாக நடிக்க ஆரம்பித்தார். இதனையடுத்து ரஜினி தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரானார்.

நடிகர் ரஜினியின் நடிப்பை விட அவரது ஸ்டைலுக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே இருந்தது. அதனையடுத்து அவர் சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்தைப் பெற்றவுடன் அவருக்கு தற்போது கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.

இந்தநிலையில் தற்போது அவருக்கு முதன்முதலாக ரசிகர் மன்றம் ஆரம்பித்த மதுரையை சேர்ந்த ஏ.பி முத்துமணி உடல்நலக்குறைவால் இன்று உயிரிழந்தார். தனது ரசிகர் உயிரிழந்ததை அறிந்த ரஜினி, அவரின் குடும்பத்தினருக்கு தொலைபேசி வாயிலாக இரங்கல் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Super star Rajinikanth fan death in madurai


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->