இளையராஜாவுக்கு நன்றி சொன்ன நடிகர் சூரி.!
Soori Thanks To Elayaraja
இயக்குனர் வெற்றிமாறனின் முதல் திரைப்படமான பொல்லாதவன் இன்றளவிலும் அனைவராலும் ஈர்க்கப்பட்ட திரைப்படமாகவே இருந்து வருகிறது. இதனை தொடர்ந்து இரண்டாவது திரைப்படமான தனுஷின் ஆடுகளம் தேசியத் திரைப்பட விருதுகளில் சிறந்த இயக்குநர் மற்றும் சிறந்த திரைக்கதையாசிரியர் விருதுகளைப் பெற்றுத் தந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தத் திரைப்படத்திற்கு இதுவரை 6 தேசிய விருதுகள் கிடைத்துள்ளன. இயக்குனர் வெற்றிமாறன் தற்போது விஜய் சேதுபதி, சூரியை வைத்து 'விடுதலை' படத்தை இயக்கி வருகிறார். எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய ‘துணைவன்’ சிறுகதையை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட இந்தப் படத்தில் கௌதம் மேனன், கிஷோர் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு கொடைக்கானல் மற்றும் சென்னையில் விறுவிறுப்பாக நடந்து வந்தது. இரண்டு பாகங்களாக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
மேலும், படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்ட நடிகர் சூரி , வெற்றிமாறன், விஜய் சேதுபதி, இளையராஜா உள்ளிட்ட படக்குழுவினர் அனைவருக்கும் தனது நன்றியை தெரிவித்துள்ளார்.
English Summary
Soori Thanks To Elayaraja