தொடரும் மர்ம மரணங்கள்.. 25 வயது சீரியல் நடிகர் மாரடைப்பால் மரணம்.!
Seriel actor bhawan Singh passed away
சமீப சில நாட்களாக நாடக கலைஞர்கள், விளையாட்டு வீரர்கள், இசைக் கலைஞர்கள் உள்ளிட்ட சிலர் அந்தந்த மேடைகள் மற்றும் மைதானங்களிலேயே அடுத்தடுத்து உயிரிழக்கும் சம்பவங்கள் நிகழ்ந்து வருகிறது. இதற்கு பல்வேறு காரணங்களை மருத்துவர்கள் கூறி வருகின்றனர்.
தமிழ் மற்றும் ஹிந்தி தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து வந்தவர் பவன் சிங் (வயது 25). இவர் கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தை சேர்ந்தவர். ஹிந்தியில் சில சீரியல்களில் நடித்து வந்ததால் மும்பையில் குடியேறியுள்ளார்.
இந்த நிலையை இவருக்கு நேற்று திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் பவன் சிங் உடலை கைப்பற்றி அவரது சொந்த ஊரான மாண்டியாவுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
சமீபத்தில் சின்னத்திரை நடிகை சுருதி சண்முக பிரியாவின் கணவர் அரவிந்த் சேகர், கன்னட நடிகர் விஜயராகவேந்திராவின் மனைவி ஸ்பந்தனா ஆகியோர் மாரடைப்பால் மரணம் அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இது போன்ற இளம் வயது மாரடைப்பு மரங்கள் ஏற்படுது பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Seriel actor bhawan Singh passed away