கவினால் இந்த வாரம் வெளியேறப்போகும் போட்டியாளர்.! அதிர்ச்சியில் ரசிகர்கள்!! - Seithipunal
Seithipunal


பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி 87 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. மேலும் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் இரண்டு வாரங்களே இருக்கும் நிலையில்,பிக்பாஸ் பட்டத்தை வெல்லப்போகும் அந்த போட்டியாளர் யார் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

16 போட்டியாளர்கள் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் தற்போது 07 மட்டுமே உள்ளனர். மேலும் ஒவ்வொருவரும் நிகழ்ச்சியில் வெற்றி பெறுவதற்காக தீவிரமாக விளையாடி வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதி கட்டத்தை எட்டியுள்ளதால், போட்டியாளர்களுக்கு கடுமையான டாஸ்குகளை பிக்பாஸ் கொடுத்து வருகிறார். மேலும் இந்த வாரம் முழுவதும் டிக்கெட் டு பினாலே டாஸ்க் நடைபெற்று வருகிறது. இதில் போட்டியாளர்கள் அனைவரும் சுயநலத்துடனும், முழுமூச்சுடனும் கடுமையாக விளையாடி வருகின்றனர்.

இந்நிலையில் இன்று நடைபெற்ற டாஸ்கில் லொஸ்லியாவிற்கு அடிபட்டநிலையில், கவின் அவரிடம் அதுகுறித்து விசாரித்தார். மேலும் அதனால் போட்டி நிறுத்திவைக்கப்பட்டது. இதனால் கோபமடைந்த ஷெரின் கவினிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். 

பின்னர் கோபமாக வாளியில் இருந்த பந்துகளை உதைத்து தள்ளிவிட்டு உள்ளே செல்கிறார். தற்போது வெளியாகியுள்ள பிரோமோவில் காட்டப்பட்டது. இதனால் டாஸ்க்குகளை சமாளிக்க முடியாமல் ஷெரின் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறுவாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sep 19 bigg boss promo


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->