5 லட்சத்தை எடுத்துக்கொண்டு கேபி வெளியேற இது தான் காரணமா.?! ரியோ மனைவியின் பதிவு.!  - Seithipunal
Seithipunal


கடந்த வியாழகிழமை திடீரென்று 5 லட்சம் ரூபாய் பண பெட்டியை எடுத்துக்கொண்டு கேபிரியல்லா வெளியேறியது பிக் பாஸ் வீட்டில் இருந்த அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

பணப்பெட்டி குறித்து, ரியோவுக்கும், கேபிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. சமூக வலைதளங்களில் ட்ரோல் செய்யப்பட்டது. இறுதிச்சுற்று வரை நெருங்கிய கேபி திடீரென 5 லட்சம் ரூபாய் பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு வெளியேறிய பொழுது வீட்டில் இருந்து பலரும் வேண்டாம் என்று அவருக்கு அறிவுரை வழங்கினர். 

மேலும், பணப்பெட்டியை வைக்க சொல்லி ரியோ கேட்டும் கூட கொடுக்காமல் விடாப்பிடியாக மறுத்துவிட்டார் கேபி. மேலும், கேப்ரில்லாவை வீட்டில் இருந்தவர்கள் பணப்பெட்டியை வைத்துவிட்டு யோசி என்று கூறிய போது நான் வைத்தால் ரியோ எடுத்துடுவான் வைக்க மாட்டேன் என்று மறுத்தார். 

இது ரியோ மற்றும் கேப்ரில்லா ரசிகர்களுக்கு இடையே வெளியில் விவாதங்களை ஏற்படுத்திய நிலையில், ரியோவின் மனைவி கேபிக்கு ஒரு ஸ்வீட் மெசேஜ் போட்டுள்ளார். 

ரியோவின் குழந்தைக்காக கேப்ரில்லா தனது உடையை குட்டியாக வெட்டி உருவாக்கிய ஆடையை தங்களது குழந்தைக்கு போட்ட போட்டோவை இணையப்பக்கத்தில் ஷேர் செய்து நன்றி கேபி என்றும், பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரியோ கேபி என்கிற க்யூட் சிஸ்டர் கிடைத்தது மகிழ்ச்சி என்றும் பதிவிட்டுள்ளார். 

டைட்டிலை ரியோ ராஜ் வெற்றி கொள்ள வேண்டும் என்பது தான் கேபியின் ஆசை என்றும், எனவே தான் அந்த பெட்டியை கேபி கொடுக்கவில்லை என்றும் அன்பு கேங் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

rio wife post about gabi


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->