பாலிவுட் நடிகர் படப்பிடிப்பில் தீ விபத்து.. ஒருவர் உடல் கருகி பலி.! - Seithipunal
Seithipunal


பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் - ஷ்ரத்தா கபூர் நடிப்பில் பெயரிடப்படாத ஹிந்தி திரைப்படம் ஒன்று தயாராகி வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில், மேற்கு அந்தேரி பகுதியில் உள்ள சித்திரகூட் படப்பிடிப்பு தளத்தில் இதன் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், படப்பிடிப்பு தளத்தில் நேற்று மாலை 4.30 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனையடுத்து உடனடியாக இதுகுறித்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் இரவு 10.30 மணியளவில் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த விபத்தில் மனீஸ் தேவாஷி என்பவர் தீயில் கருகி பலியானார்.

தீ விபத்தினால் படப்பிடிப்பு தளம் முழுவதும் கரும்புகையாக காட்சி அளித்தது. தற்போது இது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

வரும் 2023-ம் ஆண்டு மார்ச் 8-ம் தேதி இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ரன்பீர் கபூரும், ஷ்ரத்தா கபூரும் ஸ்பெயினில் படப்பிடிப்பை முடித்துவிட்டு சில தினங்களுக்கு முன்னர் தான் மும்பை வந்தது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ranbir Kapoor shooting spot fire in Mumbai


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->