'கோப்பை நமதே'... ரஜினிகாந்த் நெகிழ்ச்சி!
rajinikanth says world cup is ours
உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் தற்போது நடந்து வரும் நிலையில் இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையே ஆன உலகக் கோப்பை கிரிக்கெட் அரை இறுதிப் போட்டி மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது.
இந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற்று இறுதி போட்டிக்குள் நுழைந்தது. நடிகர் ரஜினிகாந்த் முனையில் நடந்த அரை இறுதிப் போட்டியை நேரில் பார்த்துவிட்டு விமானம் மீண்டும் சென்னை திரும்பினார்.
அப்போது சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களிடம் பேசினார். அவர் தெரிவித்திருப்பதாவது, இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி தொடங்கி முதலில் பரபரப்பாக இருந்தது.
பின்னர் இந்திய அணி வெற்றிக்கு முகமது ஷமி தான் முக்கிய காரணமாக இருந்தார். 100% உலக கோப்பை நமதே என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
English Summary
rajinikanth says world cup is ours