ஜெயலலிதா குறித்து ரஜினிகாந்த சொன்ன வார்த்தை - அதிர்ந்த அரங்கம்.!
rajinikanth say about jayalalidha ponniyin selvan
பொன்னியின் செல்வன் திரைப்படத்தில், வந்தேத்தேவன் என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நான் நடித்தால் நன்றாக இருக்கும் என்று, மறைந்த முதல்வர் ஜெயலலிதா கூறியதை, தற்போது நடிகர் ரஜினிகாந்த் நினைவு கூர்ந்து உள்ளார்.
பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா, சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நேற்று நடைபெற்றது.
இதில் நடிகர் ரஜினிகாந்த், கமலஹாசன், ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட திரைப்படங்கள் கலந்து கொண்டனர். இதற்காக பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தது.
இந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகர் ரஜினி, "இயக்குனர் மணிரத்தினத்திற்கு பல்வேறு மாநிலங்களில் மரியாதை இருக்கிறது. பெரிய பழுவேட்டையர் கதாபாத்திரத்தில் நான் நடிக்க விருப்பம் தெரிவித்த போது, மணிரத்தினம் அதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டார்.
இந்த படத்தை பார்க்க நான் ஆவளுடன் காத்திருக்கிறேன்." என்று நடிகர் ரஜினிகாந்த பேசினார். மேலும், பொன்னியின் செல்வன் திரைப்படத்தில், வந்தேத்தேவன் கதாபாத்திரத்தில் நீங்கள் நடிக்க வேண்டும் என்று, மறைந்த முதல்வர் ஜெயலலிதா தன்னிடம் தெரிவித்த நினைவுகளை நடிகர் ரஜினிகாந்த் பகிர்ந்து கொண்டார்.
English Summary
rajinikanth say about jayalalidha ponniyin selvan