ரஜினிகாந்த் பிறந்த நாளை கொண்டாடிய.. ரஜினி ரசிகர் தற்கொலை.!
Rajini fan suicide in thenkasi
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே கீழப்பாவூர் கிராமத்தை சேர்ந்தவர் தங்கமாரி (வயது 35). இவர் ரஜினிகாந்தின் தீவிர ரசிகர். சமையல் எண்ணெய் கடை வைத்து வருகிறார்.
இவர் தீவிர ரசிகரான இவர் ஒவ்வொரு ஆண்டும் ரஜினிகாந்தின் பிறந்த நாளை முன்னிட்டு தனது நண்பர்களுடன் சேர்ந்து கேக் வெட்டி உற்சாகமாக கொண்டாடுவது வழக்கம். இந்த நிலையில் கடந்த டிசம்பர் 12ம் தேதி ரஜினியின் பிறந்தநாளை தனது நண்பருடன் சேர்ந்து கேக் வெட்டி கொண்டாடினார்.
அதனால், தங்கமாரியை அவரது தாயார் மற்றும் அவரது மனைவி கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால், மனமுடைந்த தங்கமாரி கடந்த 14ஆம் தேதி விஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். உடனடியாக அவரை மீட்ட உறவினர்கள் சிகிச்சைக்காக தென்காசி மாவட்ட அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால், சிகிச்சை பலனின்றி தங்கமாரி பரிதாபமா உயிரிழந்தார். திருமணமாகி 6 மாதங்களே ஆன உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Rajini fan suicide in thenkasi