ரஜினிகாந்த் பிறந்த நாளை கொண்டாடிய.. ரஜினி ரசிகர் தற்கொலை.! - Seithipunal
Seithipunal


தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே கீழப்பாவூர் கிராமத்தை சேர்ந்தவர் தங்கமாரி (வயது 35). இவர் ரஜினிகாந்தின் தீவிர ரசிகர். சமையல் எண்ணெய் கடை வைத்து வருகிறார்.

இவர் தீவிர ரசிகரான இவர் ஒவ்வொரு ஆண்டும் ரஜினிகாந்தின் பிறந்த நாளை முன்னிட்டு தனது நண்பர்களுடன் சேர்ந்து கேக் வெட்டி உற்சாகமாக கொண்டாடுவது வழக்கம். இந்த நிலையில் கடந்த டிசம்பர் 12ம் தேதி ரஜினியின் பிறந்தநாளை தனது நண்பருடன் சேர்ந்து கேக் வெட்டி கொண்டாடினார்.

அதனால், தங்கமாரியை அவரது தாயார் மற்றும் அவரது மனைவி கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால், மனமுடைந்த தங்கமாரி கடந்த 14ஆம் தேதி விஷம் குடித்து  தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். உடனடியாக அவரை மீட்ட உறவினர்கள் சிகிச்சைக்காக தென்காசி மாவட்ட அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால், சிகிச்சை பலனின்றி தங்கமாரி பரிதாபமா உயிரிழந்தார். திருமணமாகி 6 மாதங்களே ஆன உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rajini fan suicide in thenkasi


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->