ராஜா ராணி 2 மாமியாருக்கு ஆபாச அச்சுறுத்தல்.! பரபரப்பாக சைபர் கிரைமில் புகார்.!
Raja Rani 2 praveena police complaint
கோலிவுட்டில் சின்னத்திரையில் ஒளிபரப்பு செய்யப்பட்ட நடன நிகழ்ச்சி ஒன்றின் மூலமாக நிறைய ரசிகர் பட்டாளத்தை பெற்றவர்தான் ஆலியா மானசா. இதன்பின்னர் விஜய் டிவியின் ராஜா ராணி தொடரில் கதாநாயகியாக நடித்து இருந்தார். இவர் நடித்த செம்பா கதாபாத்திரம் மிகப்பெரிய வைரல்.
சமூகவலைதளங்களில் இந்த கதாபாத்திரம் குறித்து மீம்ஸ்கள் போடப்பட்டதால் ஆலியா மானசா பட்டிதொட்டியெல்லாம் பிரபலமடைந்தார். இந்த சீரியலில் கதாநாயகனாக நடித்த சஞ்சீவினை ஆலியா காதலித்து திருமணமும் செய்து கொண்டார். இந்த ஜோடிக்கு ஒரு அழகான குட்டி மகள் இருக்கின்றார்.
தற்போது நடிகர் சித்துவுக்கு ராஜா ராணி இரண்டாம் பாகத்தில் கதாநாயகியாக ஆலியா மானசா நடித்து வருகிறார். அதில் மிகவும் பிற்போக்குத்தனமான மாமியாருடன் ஐபிஎஸ் அதிகாரியாக போகும் ஆலியா மானசா அனுபவிக்கும் கொடுமைகள் போன்றவை இல்லத்தரசிகளுக்கு மிகவும் சுவாரஸ்யம் மிக்கதாக இருக்கும்.
இதில் மாமியார் கதாபாத்திரத்தில் பிரபல மலையாள நடிகை பிரவீணா நடித்து வருகின்றார். சமீபத்தில் இவரது புகைப்படத்தை மர்ம நபர்கள் சிலர் ஆபாசமாக சித்தரித்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு இருந்தனர்.
தற்போது நடிகை பிரவீணா சைபர் க்ரைம் காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்துள்ளார். சமூக வலைதளங்களில் தன்னை பின் தொடர்பவர்களும், தன்னுடன் பணியாற்றுபவர்களும் தனக்கு தகாத வகையில் புகைப்படங்களை அனுப்புவதாகவும் அவர் புகாரளித்துள்ளார்.
English Summary
Raja Rani 2 praveena police complaint