ராஜா ராணி 2 நடிகை ஆபாச புகார்.. மார்பிங் புகைப்படங்களால் அதிர்ச்சி.!
Raja Rani 2 Praveena complaint on police
பிரபல சீரியல் நடிகை பிரவீனா காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் கொடுத்துள்ளார்.
விஜய் தொலைக்காட்சியின் ராஜா ராணி 2 சீரியலில் மாமியார் கதாபாத்திரத்தில் பிரபல மலையாள நடிகை பிரவீணா நடித்து வருகின்றார். இவர் மலையாள சினிமா பலவற்றில் நடித்திருக்கிறார்.
சமீப காலமாக இவரது புகைப்படத்தை மர்ம நபர்கள் சிலர் ஆபாசமாக சித்தரித்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு இருந்தனர். இதுபற்றி, நடிகை பிரவீணா சைபர் க்ரைம் காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்து இருந்தார்.
தற்போது மீண்டும் அவர் காவல் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்துள்ளார். அதில், "தனது மகள் மற்றும் தன்னுடைய புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து இணையதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்." என்று தெரிவித்துள்ளார்.
English Summary
Raja Rani 2 Praveena complaint on police