விஜய் இவ்வளவு மோசமானவரா?! வாடைக்கு கூட வீடு தராமல் விரட்டிவிட்டார்! பிரபல தயாரிப்பாளர் வேதனை!  - Seithipunal
Seithipunal


டிகர் விஜய் முதல்முறையாக நடிக்க வரும்போது அவரது தந்தை இரண்டு படங்களை வைத்து எடுத்து தோல்வியடைந்த நிலையில் தயாரிப்பாளர் கலைஞானத்தை வீட்டிற்கு சென்று சந்தித்துள்ளார்.

அப்போது சந்திரசேகர், என் மகன் விஜய் சினிமாவில் நடிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறான், நாங்கள் வேண்டாம் என்று கூறியும் அவன் விடாப்பிடியாக வீட்டை விட்டு சென்று விட்டான். பின்னர் அவரது அம்மா விஜயை சமாதானம் செய்து அழைத்து வந்தார்.

அதன் பின்னர், நான் அவரை வைத்து படம் எடுத்து பெரிய நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இரண்டு வீட்டை விற்று விட்டேன், மூன்றாவதாக ஒரு படம் எடுத்து இருக்கிறேன். இந்த படம் வெளிவர நீங்கள் தான் உதவவேண்டும் என்று கேட்டுள்ளார்.

அவர் கேட்டதின் காரணமாக அந்த படத்தை நாங்கள் பார்த்தோம். அதன்பிறகு ஒரு புதிய படத்தில் விஜய்யை நடிக்கவைக்க தயாரிப்பாளரை நான் தான்அரேன்ஜ் செய்து கொடுத்தேன். அந்த படத்தையும் சந்திர சேகர் தான் இயக்குவதாக இருந்தது. ஆனால் அவரிடம் கதை இல்லாத காரணத்தினால் நான் ஒரு புதிய கதையை அவரிடம் கொடுத்தேன்.

ஆனால் அதற்காக அவர் எந்த பணமும் ஒரு ரூபாய் கூட கொடுக்கவில்லை. பின்னர் தற்போது விஜய் முன்னணி ஹீரோவாகி உள்ளார். மேலும், சென்னையில் அவர் பல வீடுகள் கட்டி வாடகைக்கு விட்டு வருகிறார். இந்த நிலையில் நான் எஸ்.வி சேகரிடம் சென்று வாடகைக்கு வீடு வேண்டும் என்று கேட்டபோது அதற்கு அவர் தற்போது விஜய்யும் அவரது மனைவியும் தான் அனைத்தையும் பார்த்துக் கொள்கிறார்கள் என்றும் என்னால் எதுவும் செய்ய முடியாது என்று மறுத்து விட்டார்.

இந்த நிலையில் என்னுடைய இந்த நிலைமையை அறிந்த ரஜினிகாந்த, நான் அவரிடம் கேட்காமலேயே எனக்கென ஒரு வீட்டை வாங்கி கொடுத்துள்ளார் என்று கலைஞானம் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

producer kalaignanam about s v sekar


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->