#பொன்னியின்_செல்வன் வெற்றி : கல்வி அறக்கட்டளைக்கு தயாரிப்பு நிறுவனம் சர்ப்ரைஸ்.!
Ponniyin selvan team gives Fund To kalki foundation
லைகா நிறுவனம் தயாரிப்பில் மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகிய திரைப்படம் தான் பொன்னியின் செல்வன். இந்த திரைப்படம் உலகம் முழுவதும் கடந்த செப்டம்பர் 30-ம் தேதி வெளியாகியது.
சோழர்களுடைய, பெருமையை பேசும் விதமாக வரலாற்று திரிப்பில் உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படத்திற்கு மிகுந்த வரவேற்புக் கிடைத்தது. இந்த திரைப்படத்தில் நடிகர் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, ஜெயராம், சரத்குமார், பார்த்திபன் பலரும் நடித்திருந்த நிலையில் நடிகைகள் திரிஷா ஐஸ்வர்யா இருவரும் பிரம்மிக்க வைத்தனர்.
பொன்னியின் செல்வன் படம் உலக அளவில் இதுவரை 450 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இது மிகப்பெரிய வெற்றியாக பார்க்கப்படுகிறது. பலரிடமும் பொன்னியின் செல்வன் திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் சமீபத்தில் ஓடிடிடையில் வெளியாகியது.
இந்த நிலையில், தற்போது படத்தின் வெற்றி கழித்து இருக்கும் படக்குழு கல்கி அறக்கட்டளைக்கு ஒரு கோடி ரூபாய் சன்மானம் வழங்கியுள்ளது. லைக்கா நிறுவனம் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து இந்த தொகையை கல்கி அறக்கட்டளைக்கு கொடுத்துள்ளது.
English Summary
Ponniyin selvan team gives Fund To kalki foundation