எடை குறைப்பு சிகிச்சை மேற்கொண்ட நடிகை உயிரிழப்பு.. மருத்துவமனை மீது வழக்குப்பதிவு.!
Plastic surgery actress Death case against case filed hospital
கர்நாடகாவைச் சேர்ந்த 21 வயதான கன்னட நடிகை சேத்தனா ராஜ் பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் நேற்று முன் தினம் எடை குறைப்புக்கான பிளாஸ்டிக் சர்ஜரி அறுவை சிகிச்சை மேற்கொண்டதாக கூறப்படுகிறது.
அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நிறைவடைந்த நிலையில் அன்று மாலை மூச்சுவிட முடியாமல் கஷ்டப்பட்ட நடிகை சேர்த்தா ராஜின் உடல்நிலை மேலும் மோசமடைய துவங்கியது.
மேலும், அவருக்கு நுரையீரலில் நீர் சேர்ந்ததால் உடல்நிலை மேலும் மோசமடைந்தது. இதனையடுத்து அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த நிலையில் திடீரென நேற்று மாலை மரணமடைந்தார்.
இந்த நிலையில் நடிகை மரணம் குறித்து பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் தனியார் மருத்துவமனை மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
அந்த புகாரில் மருத்துவமனையின் அலட்சியத்தால் தமது மகள் உயிரிழந்ததாக நடிகையின் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் அறுவை சிகிச்சையை வேண்டாம் என்று என் மகளிடம் கேட்டுக் கொண்டேன். ஆனால் தமக்குத் தெரியாமல் அவர் மருத்துவமனையில் சேர்ந்தார் என அவரது தந்தை வரதராஜ் தெரிவித்துள்ளார்.
மேலும் அறுவை சிகிச்சையின் போது தனது மகளுக்கு மூச்சு விடுவதில் சிக்கல் இருப்பதாக மருத்துவமனை ஊழியர்கள் என் மனைவியிடம் தெரிவித்தனர். நாங்கள் என் மகளை வேறு மருத்துவமனைக்கு மாற்றினோம், அங்கு அவள் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர் என வரதராஜ் கூறியுள்ளார்.
போதுமான உபகரணங்களின்றி அறுவை சிகிச்சை செய்தால் என் மகள் உயிரிழந்தார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
English Summary
Plastic surgery actress Death case against case filed hospital