#பெரம்பலூர் : கழுத்தறுத்து கொல்லப்பட்ட வயதான தம்பதி.. வேப்பந்தட்டையில் அதிர்ச்சி.!  - Seithipunal
Seithipunal


பெரம்பலூர் மாவட்டத்தில் வயதான தம்பதி கொலை செய்யப்பட்டுள்ள செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வேப்பந்தட்டை ஊராட்சிக்கு உட்பட்ட தொண்டபாடி கிராமத்தில் மாணிக்கம் என்ற 75 வயதான நபர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மாக்காயி (வயது 70) என்ற மனைவி இருந்துள்ளார். சம்பவ தினத்தன்று இவர்கள் இருவரும் கழுத்தருக்கப்பட்டு பிணமாக கிடப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது.

இதன் பெயரில் அரும்பாவூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாணிக்கம் மற்றும் மக்காயி இருவரது பிணத்தையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். 

இது பற்றி வழக்கு பதிவு செய்து முதற்கட்ட விசாரணையை துவங்கிய நிலையில் நகை, பணத்திற்காக இந்த தம்பதி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. தொடர்ந்து, போலீசார் அடுத்த கட்ட விசாரணையை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Perambalur old Couples died


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->