"என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா" - சமந்தாவை கலாய்த்த நெட்டிசன்கள்! கடுப்பில் ரசிகர்கள்! - Seithipunal
Seithipunal


தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவர் சில நாட்களுக்கு முன்பு மயோசைட்டீஸ் என்னும் நோயினால் பாதிக்கப்பட்டு இருந்தார். தற்போது அந்த நோயிலிருந்து மீண்டு படப்பிடிப்புகளில் கவனம் செலுத்தி வருகிறார். இவரது நடிப்பில்  சாகுந்தலம் என்ற திரைப்படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது.

இந்தத் திரைப்படத்தைப் பற்றி ஓரளவு பாசிட்டிவான விமர்சனங்களே வந்து கொண்டிருக்கின்றன. ஆனாலும் சமந்தாவை பற்றிய சில செய்திகள் இணையதளங்களில் பரவலாகி பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. அவரது படம் ட்ரெண்டிங்காகும் அதே நேரத்தில் இந்த விஷயமும் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

மயோசைட்டிஸ் நோயின் தாக்கத்திலிருந்து மீண்டு வந்த சமயங்களில் சமந்தா விழா மேடைகளில் வைத்து கண்ணீர் விட்டு அழுவார். அது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகும் போது நாங்கள் உங்களுடன் இருக்கிறோம் சமந்தா என ரசிகர்கள் கமெண்ட் செய்து வந்தனர். தற்போது அதே ரசிகர்களே சமந்தாவிற்கு எதிராக திரும்பி உள்ளனர். 

தற்போது ரசிகர்கள் மேடையில் அழுது ரசிகர்களை கவரும் சமந்தா என்றும் சிம்பதி ஸ்டார் சமந்தா என்றும் ஹேஷ்டேக்  ட்விட்டரில் ட்ரெண்டிங் செய்து வருகின்றனர். இது குறித்து பேசி உள்ள வலைதள அந்தணன் என்பவர் ஒரு நடிகர் அல்லது நடிகை மேடையில் கண்ணீர் விட்டு அழுதால் என்ன நடக்கும் என்பது தற்போது தெரிந்திருக்கிறது. இதற்கு முன்  விஷாலுக்கும் இது போன்ற ஒரு சம்பவம் தான் நிகழ்ந்தது என்று தெரிவித்திருக்கிறார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Netizens who troll Samantha for her crying on stage


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->