மாரி செல்வராஜ் இயக்கும் 5வது படம்: ஹீரோ யாரு தெரியுமா? - Seithipunal
Seithipunal


கடந்த 2018 ஆம் ஆண்டு இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மாரி செல்வராஜ். இவரது முதல் திரைப்படம் 'பரியேறும் பெருமாள்' மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. 

இதனை அடுத்து தனுசு நடிப்பில் கர்ணன், வாழை போன்ற படங்களை இயக்கினார். இந்நிலையில் இயக்குனர் மாரி செல்வராஜ் தனது 5வது திரைப்படத்தை இயக்க உள்ளார். 

இந்த திரைப்படத்தில் நடிகர் துருவ்விக்ரம், அனுபமா பரமேஸ்வரன் மற்றும் முன்னணி நடிகர்கள் நடிக்க உள்ளனர். பா. ரஞ்சித் இந்த திரைப்படத்தை தயாரிக்க உள்ளார். 

கபடி விளையாட்டை மையமாகக் கொண்டு உருவாகும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. இது குறித்து மாரி செல்வராஜ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், 

'எனது 5வது திரைப்படத்தை நான் இயக்க உள்ளேன். மீண்டும் பா. ரஞ்சித் அண்ணாவுடன் இணைந்து பணி புரிவது மிகவும் மகிழ்ச்சி' என குறிப்பிட்டுள்ளார். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mari Selvaraj film update


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->