"ஓஹோ... அப்படியா விஷயம்" சூப்பர் ஸ்டார்க்கு எதிரான பல நாள் பகையை தீர்த்துக் கொண்ட ரோஜா.!
is roja settled the long time feud with rajini kanth sensational news going on in internet
தமிழ் சினிமாவில் 40 வருடங்களுக்கும் மேலாக சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வருபவர் ரஜினிகாந்த். ஜெயிலர் திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் இவர் சமீபத்தில் தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் சென்றிருந்தார். அப்போது அந்த சம்பவம் பற்றி இவர் கூறிய கருத்து பெரும் சர்ச்சைக்குள்ளாகி இருக்கிறது.
ஹைதராபாத்தில் வளர்ச்சிக்கு முன்னாள் பிரதமர் சந்திரபாபு நாயுடுவின் பங்கு முக்கியமானது என்று ரஜினி குறிப்பிட்டிருந்தார். மேலும் கடந்த 20 ஆண்டுகளில் ஹைதராபாத் மிகவும் முன்னேறி இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். இதற்கு சினிமா நடிகையும் ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சியின் அமைச்சருமான ரோஜா கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் சிரிப்பை வரவழைப்பதாக அவர் ஏளனம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. இது குறித்து தற்போது சமூக வலைதளங்களில் செய்தி ஒன்று பரவி வருகிறது. ரஜினி மற்றும் ரோஜாவிற்கிடையான முன்னாள் இருந்த பகையை தீர்ப்பதற்காகவே அவர் இவ்வாறு பேசியிருக்கிறார் என சினிமா விமர்சிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள சினிமா விமர்சகர் ஒருவர் ரோஜா மற்றும் ரஜினிக்கு இடையேயான பகை பாட்ஷா படத்திலிருந்து ஆரம்பமானதாக கூறியிருக்கிறார். பாட்ஷா படத்தை முதலில் இயக்க இருந்தது ரோஜாவின் கணவர் ஆர்கே செல்வமணி தான் என்றும் அவர் சில கோரிக்கைகளை விதித்ததால் அவரை நீக்கிவிட்டு சுரேஷ் கிருஷ்ணாவை படத்தை இயக்க ஒப்பந்தம் செய்ததாகவும் தெரிவித்திருக்கிறார். இந்தப் பகையை தீர்த்துக் கொள்ளும் நோக்கில் தற்போது ரோஜா பேசியிருக்கிறார் எனவும் அந்த விமர்சகர் குறிப்பிட்டுள்ளார்.
English Summary
is roja settled the long time feud with rajini kanth sensational news going on in internet