மீண்டும் ஹீரோ அவதாரம் எடுக்கவுள்ள கவுண்டர் மகான்.!
Goundamani act again as hero
பிரபல நகைச்சுவை நடிகர் கவுண்டமணி மறுபடியும் ஹீரோவாக ஒரு புது படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.
40 ஆண்டுகளுக்கும் மேலாக கோலிவுட் சினிமாவில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து வருபவர்தான் கவுண்டமணி. இவரது நகைச்சுவைகளுக்கு இன்றைய அளவும் நிறைய ரசிகர்கள் இருக்கின்றனர். சில வருடங்களாக சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்தார்.
இதற்கு காரணம் அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டது தான். அதன்பின் கடந்த 2015ல் 49 ஓ என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக நடித்திருந்தார். இதை அடுத்து எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது என்ற படத்திலும் அவர் ஹீரோவாக நடித்தார்.
தற்போது, அன்பரசன் இயக்கவுள்ள பழனிச்சாமி வாத்தியார் என்ற படத்தில் கவுண்டமணி ஹீரோவாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த திரைப்படத்தை மதுரை செல்வம் தயாரிக்க உள்ளதாக அந்த தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Goundamani act again as hero