அஜித் பட பாணியை ஃபாலோ செய்யும் காந்தாரா படக்குழு.. கை கொடுக்குமா கதை.?! - Seithipunal
Seithipunal


கன்னடத்தில் காந்தாரா எனும் திரைப்படத்தை ரிஷப் ஷெட்டி எழுதி, தயாரித்து இயக்கி ஹீரோவாகவும் நடித்துள்ளார். இந்த படத்தில் தெய்வ நர்த்தகர்களின் துயரம் குறித்து விரிவாக கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது.

கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என 5 மொழிகளில் திரையரங்குகளில் வெளியான இந்த திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் சூப்பர்-டூப்பர் ஹிட் திரைப்படமாக  ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

ரூ.16 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம் சுமார் ரூ.400 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகின்றது. . இந்த நிலையில் காந்தாரா திரைப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது. 

ஆனால் இந்த இரண்டாம் பாகம் ஆனது முதல் பாகத்தின் தொடர்ச்சியாக இல்லாமல் புதிய கோணத்தில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. ஆகவே இந்த படம் வெற்றி பெறுமா என்ற கேள்வி ரசிகர்கள் பலருக்கும் ஏற்பட்டுள்ளது.  ஏற்கனவே நடிகர் அஜித்தின் பில்லா மற்றும் பில்லா 2 உள்ளிட்ட படங்கள் வெவ்வேறு கோணத்தில் உருவாக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Gantara Part 2 update


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->