விஜய்யுடன் இணையும் சேரன்! சேரனின் ட்விட்டுக்கு பதிலளித்த ரசிகர்!!  - Seithipunal
Seithipunal


மிழ் திரைத் துறையில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் சேரன். இவர் இயக்கிய ஆட்டோகிராஃப், பொற்காலம், தவமாய் தவமிருந்து, பாண்டவர் பூமி போன்ற படங்கள் தமிழ் சினிமாவில் மிகவும் முக்கியமான படங்களாக பார்க்கப்படுகிறது. 

இவர் விஜய் தொலைக்காட்சியில் நடந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக பங்கு பெற்றார். அதன் பின்னர் வீட்டில் இருந்து வெளியேறி அவர் மீண்டும் எப்போது படங்களை இயக்குவார் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர். 

இதுகுறித்து இயக்குனர் சேரன் அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தவமாய் தவமிருந்து போன்ற ஒரு படைப்பாக தான் விஜய்சேதுபதி அவர்களுடன் இணையும் படத்துக்காக முடித்து வைத்திருக்கும் திரைக்கதை. ஏனோ செய்து முடிக்க முடியாமல் தள்ளிக்கொண்டே போகிறது... அண்ணன்களும் தங்கைகளும் கண்ணுக்குள் வைத்து பாதுகாக்க போகும் படம். வழி விடுமா காலம்.. என பதிவிட்டுள்ளார்.

சேரன் இந்த பதிவிற்கு அவரது ரசிகர் காலம் விரைவில் கைகூடும் கிழக்குசீமையிலே உரித்த பாச மலர் போன்ற படைப்பாக வரப்போகும் அந்த படத்திற்காக ஆவலுடன் காத்திருக்கிறோம் சார்.. என்று கமெண்ட் செய்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Fan command for cheran twit


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->