24 கோடி ருபாய் சம்பளம் கொடுத்தும் ஜெயலலிதாவாக நடிக்க மறுத்த பிரபல நடிகை!! - Seithipunal
Seithipunal



சினிமாயுலகில் சமீபகாலமாக பல பிரபலங்களின் வாழ்க்கை வரலாறும் படமாக எடுக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றையும் சினிமாவாக எடுப்பதற்கு கடுமையான போட்டிகள் நிலவி வருகிறது.

நேர்கொண்ட பார்வை படத்தில் அஜித்தின் மனைவியாக நடித்துவருகிறார் நடிகை வித்யா பாலன். பாலிவுட் நடிகையான இவர் இந்த படத்தின் மூலம் தமிழில் அறிமுகம் ஆகிறார். மேலும், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரங்கராஜ் பாண்டே, ஆத்விக் ரவிச்சந்திரன் போன்ற பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ள இப்படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இந்நிலையில், ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு தலைவி என்ற பெயரில் புதிய படம் உருவாக உள்ளது. இப்படத்தை இயக்குனர் ஏ.எல் விஜய் இயக்குகிறார். இப்படத்தில் ஜெயலலிதாவாக  நடிக்க வித்யாபாலனுக்கு 24 கோடி சம்பளம் பேசப்பட்டதாக கூறப்படுகிறது.

ஆனாலும் இந்த படவாய்ப்பை வித்யாபாலன் மறுத்துள்ளார். ஏனெனில், பிரபல அரசியல் தலைவர் இந்திரா காந்தியின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகும் வெப் சீரிஸில் நடிக்கயிருப்பதால் தான் இந்த வாய்ப்பை மறுத்துவிட்டதாக கூறியுள்ளார்.

 அதனால் தான்  ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் ஜெயலலிதாவாக நடிக்கும் வாய்ப்பு கங்கனாவிற்கு கிடைத்துள்ளது. ஆனால், இப்படத்தில் கங்கனா நடிப்பதற்கு ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பி வருகிறது. இந்த படத்திற்காக கங்கனா 24 கோடி ருபாய் சம்பளம் பெறுவது குறிப்பிடத்தக்கது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

famous actress not accept to act as jeyalalitha


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->