காந்தாரா 2 படத்தின் அசத்தல் அப்டேட் கொடுத்த படக்குழு.. உற்சாகத்தில் ரசிகர்கள்.! - Seithipunal
Seithipunal


கன்னடத்தில் காந்தாரா எனும் திரைப்படத்தை ரிஷப் ஷெட்டி எழுதி, தயாரித்து இயக்கி ஹீரோவாகவும் நடித்திருந்தார். இந்த படத்தில் குலதெய்வ நர்த்தகர்களின் துயரம் குறித்து விரிவாக கதைக்களம் அமைக்கப்பட்டிருந்தது.

கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என 5 மொழிகளில் திரையரங்குகளில் வெளியான இந்த திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் சூப்பர்-டூப்பர் ஹிட் திரைப்படமாக  ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

ரூ.16 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம் சுமார் ரூ.400 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. அதனைத் தொடர்ந்து காந்தாரா 2 திரைப்படம் குறித்த அறிவிப்பு எப்போது வெளியாகும் என ரசிகர்கள் காத்திருந்தனர்.

இந்த நிலையில் காந்தாரா 2 திரைப்படம் அடுத்த ஆண்டு வெளியாகவுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. அந்த வகையில் இந்தப் படத்தின் இயக்குனர் ரிஷப் ஷெட்டி நேற்று யுகாதி பண்டிகையை முன்னிட்டு ரசிகர்களுக்கு வாழ்த்து தெரிவித்து 'காந்தாரா -2' படத்தின் கதை எழுதும் பணியில் ஈடுப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Director rishabh Shetty update for kanthara 2


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->