"அப்பாவின் பெயருக்கு களங்கம்" தந்தையின் பெயரை காப்பாற்ற தீவிரமாக போராடும் துருவ் விக்ரம்!
dhruv vikram trying hard to make a name for himself
தமிழ் சினிமாவில் 1990 ஆம் ஆண்டு வெளியான என் காதல் கண்மணி என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் சியான் விக்ரம். இவரது நடிப்பில் வெளிவந்த சேது திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதனைத் தொடர்ந்து தில், தூள், சாமி போன்ற திரைப்படங்களின் வெற்றியால் தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகராக வலம் வருபவர். தற்போது பா ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இவரது மகன் துருவ் விக்ரம். இவர் ஆதித்யா வர்மா என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். அந்தத் திரைப்படம் ஹிந்தி மற்றும் தெலுங்கில் வெற்றி பெற்ற திரைப்படத்தின் ரீமேகாக வெளியானது. அதனைத் தொடர்ந்து தனது தந்தையுடன் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் மகான் என்ற திரைப்படத்தில் நடித்தார்.
இந்தத் திரைப்படம் அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்களிடம் எதிர்பார்த்த அளவு வரவேற்பை பெறவில்லை. இதனால் ஒரு வெற்றி படத்தை கொடுத்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் துருவ் விக்ரம். இவரது தந்தை சியான் விக்ரம் சினிமாவில் நீண்ட காலம் போராடி தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்துக் கொண்டிருக்கிறார்.
அதைப் போலவே தானும் கடின உழைப்பின் மூலம் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடிக்க வேண்டும் என்று போராடி வருகிறார் துருவ் விக்ரம். தற்போது இவர் வெற்றி இயக்குனர் மாரி செல்வராஜின் புதிய திரைப்படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாக இருக்கிறார். விளையாட்டை மையமாக வைத்து உருவாகி வரும் இந்த திரைப்படத்தில் தீவிரமாக நடித்து வருகிறார் அவர். இதற்கு மேலும் சினிமாவில் தோற்றால் அது அப்பாவின் பெயருக்கு கலங்கம் விளைவிப்பதாக இருக்கும் என்று வெறியோடு உழைத்து வருகிறாராம் துருவ் விக்ரம்.
English Summary
dhruv vikram trying hard to make a name for himself