சென்னையை தவிர்த்து சிறு நகரத்தில் பாடலை வெளியிட்ட "செல்லமடா நீ எனக்கு" பட குழு!  - Seithipunal
Seithipunal


மயிலாடுதுறையில் நடைபெற்ற செல்லமடா நீ எனக்கு என்ற திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில், நடிகை தேவயாணி, இயக்குனர் பேரரசு, பொன்னம்பலம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் செல்லமடா நீ எனக்கு என்ற புதிய படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடைபெற்றது. தாய்க்கும் மகனுக்கும் இடையிலான பாசப்பிணைப்பை வெளிப்படுத்தும் விதமாக திரைக்கதை அமைந்துள்ள இந்த படத்தினை கலைமகள் புரொடக்ஷன் தயாரித்துள்ளது. புதுமுக நாயகன் வசீகரன், தண்ணியில கண்டம், உச்சத்து சிவா, ஒண்டிக்கட்ட போன்ற படங்களில் நடித்த நேகா கதாயாசியாக நடித்துள்ளார். 

தாஜ்நூர் இசையமைப்பில், செல்வா ஒளிப்பதிவு செய்துள்ளார். கதைவசனம் பாடல்களை, மதுரா மற்றும் வேள்பாரி எழுதியுள்ளனர். திரைப்பட இயக்குநர் ஆனந்தசிவம் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில், அசுரன் உள்ளிட்ட படங்களில் பாடல் பாடியுள்ள வேல்முருகன் உள்ளிட்டோர் பாடல்களை பாடியுள்ளனர். சிறுமடை லிங்கம் தயாரித்துள்ள இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. 

சென்னை உள்ளிட்ட பெரிய நகரங்களில் மட்டுமே பாடல் வெளியீட்டு விழா நடைபெற்று வந்த நிலையில், மயிலாடுதுறையில் நடைபெற்ற இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில், தயாரிப்பாளர் சிறுமடை லிங்கம் பாடல்; குறுந்தகட்டை வெளியிட, திரைப்பட நடிகை தேவயானி பெற்றுக்கொண்டார். இந்நிகழ்ச்சியில், திரைப்பட இயக்குநர்கள் பேரரசு, ராஜகுமாரன், நடிகர்கள் பொன்னம்பலம், வையாபுரி, பாடகர் வேல்முருகன் உள்ளிட்ட திரை பிரபலங்கள் பலர் பங்கேற்றனர். முன்னதாக நடைபெற்ற கலை நிகழ்ச்சிகள் பொதுமக்களை மகிழ்வித்தது குறிப்பிடத்தக்கது. 

செய்தியாளர் : மணி


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chellamadaa nee movie audio launch


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->