வெளியானது கேப்டன் மில்லர் படத்தின் புதிய அப்டேட் - ரசிகர்கள் கொண்டாட்டம்.! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், தனுஷ், பிரியங்கா அருள்மோகன் நடிப்பில் உருவாகிவரும் திரைப்படம் கேப்டன் மில்லர். ஜிவி பிரகாஷ்குமார் இசையமைக்கும் இந்த படம் உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு, மூன்று பாகங்களாக வெளிவர இருப்பதாக சொல்லப்படுகிறது. 

இந்த நிலையில், நடிகர் தனுஷின் 40வது பிறந்த நாளை முன்னிட்டு கடந்த ஜூலை 28ம் தேதி ‘கேப்டன் மில்லர்’ படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டது. இதைத்தொடர்ந்து, படத்தின் எக்ஸ்ளூசிவ் புகைப்படங்களை வெளியிட்ட படக்குழு படம் பொங்கல் பண்டிகையின் போது வெளியாகிறது என்பதையும் தெரிவித்தது.

இதைத்தொடர்ந்து, இந்தப் படத்தின் முதல் பாடல் குறித்தான அப்டேட்டை படத்தின் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்குமார் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

அதாவது, 'இந்த வரண்ட மண்ணும் குருதி குடிக்கும் …

புழுவுக்கெல்லாம் விருந்து படைக்கும் ….

நாந்தாண்டா நீதி ….
நாந்தாண்டா நீதி ….'

என்ற பாடல் வரிகளைக் குறிப்பிட்டு, அதனை பாடியவர் நடிகர் தனுஷ் என்ற விஷயத்தையும் பகிர்ந்துள்ளார். இந்த சம்பவம் ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

captain millar movie first song revealed


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->