பிக் பாஸ் இல்லத்தில் இருந்து வெளியேற கவின் கூறிய அந்த வார்த்தைகள்! பேரதிர்ச்சியில் நண்பர்கள்..!! - Seithipunal
Seithipunal


கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் 3 நிகழ்ச்சி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. கவின், லொஸ்லியா, சாண்டி, ஷெரின், முகென், தர்ஷன் ஆகிய 6 போட்டியாளர்கள் மட்டுமே தற்போது பிக்பாஸ் வீட்டில் உள்ளனர். இவர்களில் முகென் கோல்டன் டிக்கெட் பெற்று இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றார்.

இந்த வாரம் முகேனை தவிர மற்ற ஐந்து போட்டியாளர்களும் இந்த வாரம் நேரடியாக நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். நேற்று ஒரு போட்டியாளர் ஐந்து லட்சத்தை எடுத்துக் கொண்டு பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறலாம் என பிக்பாஸ் கூறினார். உடனே கவின் இதற்கு நான் தயார் என்று கூறினார். இது சாண்டி மற்றும் லாஸ்லியாவை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. 

இந்த செய்தி குறித்த முழு வீடியோ பதிவு: 

அதனை பிறகு கவினிடம், சாண்டி நீ வெளியே போகவேண்டாம், இன்னும் 10 நாட்கள் தான் உள்ளது என்று கூறினார். அதற்கு கவின் ஒரு விளக்கம் தந்தார். அப்போது இவ்வளவு செய்து விட்டு, மேடையில் எப்படி நிற்க முடியும். இன்னும் பத்து நாள் தான் வெளில வாங்க பார்த்துக்கலாம் என கவின் கூறுகிறார். 

அதோடு தன் கடனை அடைப்பதற்காகத் தான் பிக்பாஸ் வீட்டிற்கு வந்ததாக கவின் ஏற்கனவே கூறியது குறிப்பிடத்தக்கது. எனவே தற்போது கூடுதலாக பணம் கிடைத்தால் அது தனக்கு மேலும் உவியாக இருக்கும் என அவர் கருதி பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியதாக கூறப்படுகிறது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

bigg boss kavin says about outcome bigg boss home


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->