மீண்டும் தீர்க்கமான முடிவெடுத்த லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா.! இனி இப்படி தானாம்.!
Actress Nayanthara make Good decision
லேடிஸ் சூப்பர் ஸ்டாரான நயன்தாரா மீண்டும் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் தரும் கதையில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தற்போது நயன்தாரா, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் அண்ணாத்த திரைப்படத்திலும், தனது காதலரான விக்னேஷ் சிவன் இயக்கும் காத்துவாக்குல 2 காதல் என்ற படத்தில் விஜய் சேதுபதி மற்றும் சமந்தாவுடன் நடித்துள்ளார்.
இந்நிலையில் நடிகை நயன்தாரா அறம், கோலமாவு கோகிலா, டோரா மற்றும் மூக்குத்தி அம்மன் போன்ற கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் தரும் கதாபாத்திரத்தில் மீண்டும் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தற்போது அதற்காக கதை கேட்டு வருகிறாராம் நயன்தாரா. விரைவில் நயன்தாராவின் படத்தைப் பற்றிய அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்தது போதும். இனி தனது பாணியில் ஒரு ரவுண்டு வர வேண்டுமென நயந்தாரா முடிவு செய்துள்ளதாக கூறபடுகிறது.
English Summary
Actress Nayanthara make Good decision