இயக்குநர் அவதாரம் எடுக்கும் பிரபல நடிகர்.! - Seithipunal
Seithipunal


இயக்குநர் அவதாரம் எடுக்கும் பிரபல நடிகர்.!

தமிழ் சினிமாவின் பிரபல நடிகர்களில் ஒருவரான ஜெயம் ரவி நடிப்பில் உருவான திரைப்படம் ‘இறைவன்’. நயன்தாரா கதாநாயகியாக நடித்துள்ள இந்தத் திரைப்படம் வருகிற 28ம் தேதி வெளியாக உள்ளது. 

இயக்குநர் அகமது இயக்கிய இந்தப் படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவன்ட் நேற்று மாலை சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில், நடிகர் விஜய்சேதுபதி, இயக்குநர் வினோத் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். அப்போது பேசிய நடிகர் ஜெயம்ரவி, ”இறைவன் என்றாலே அன்புதான். 

எதுக்கு இந்தப் பெயர் வைத்தீர்கள் என்று என்னிடம் நிறைய பேர் கேட்டார்கள். இந்தத் தலைப்பை இயக்குநர் சொன்ன போது, 'இன்னுமா யாரும் இந்த தலைப்பை வைக்கவில்லை?' என்று எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அன்பை கொடுக்கும் இறைவனை ஏன் தலைப்பாக வைக்கவில்லை என்று தோன்றியது.

இந்த அன்பில்தான் படம் தொடங்கியது. கோவிட் காரணமாக 'ஜனகணமன' நின்றது. அதன் பின்புதான் 'இறைவன்' தொடங்கியது. நான் பார்த்த முதல் நடிகன் ரவிதான் என்று விஜய் சேதுபதி சொன்னார். 

ஆனால், நான் இயக்க வேண்டும் என்று நினைத்த முதல் ஹீரோ விஜய்சேதுபதிதான். சீக்கிரம் எனக்கு கால்ஷீட் கொடுங்கள். 'பொன்னியின் செல்வன்' படமெல்லாம் முடித்து விட்டு என்ன செய்ய போகிறாய் என்று என் அண்ணன் கேட்டார். ஏன் 'தனி ஒருவன்2' பண்ண மாட்டாயா என்று கேட்டேன்.

அப்படி ஒரு அண்ணன் இருக்கும் போது எல்லாமே எனக்கு ஜெயம் தான். 'இறைவன்' படம் எல்லாருக்கும் பிடிக்கும். நான் இந்தப் படத்தில் நன்றாக நடித்திருக்கிறேன் என்றால் யுவனும் அதற்குக் காரணம்" என்று பேசியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actor jeyam ravi speech iraivan movie event


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->