இசை வெளியிட்டு விழாவில் பாட்டு பாடி கேப்டனுக்கு அஞ்சலி செலுத்திய நடிகர் தனுஷ்.! - Seithipunal
Seithipunal


அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் கேப்டன் மில்லர். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் பிரியங்கா மோகன், சந்திப் கிஷன், ஜான் கொக்கேன், நிவேதிதா சதீஷ், சிவராஜ் குமார் மற்றும் பலர் நடித்துள்ளனர். 

ஜிவி பிரகாஷ் இசை அமைத்துள்ள இந்தப் படம் மூன்று பாகங்களாக வெளியாக இருப்பதால், இந்த படம் தனுஷின் சினிமா வாழ்க்கையில், மிகவும் முக்கியமான படமாக உருவாகியுள்ளது. அதனால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்புகள் ரசிகர்களிடையே நாளுக்கு நாள் எகிறிக்கொண்டே போகிறது. அந்த வகையில் இந்த படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகளை ரசிகர்கள் அனைவரும் வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையில், கேப்டன் மில்லர் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் கோலாகலமாக தொடங்கி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்தில், சமீபத்தில் மறைந்த நடிகர் கேப்டன் விஜயகாந்த் மற்றும் மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமாருக்கு 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

பின்னர், நிகழ்ச்சியில் பேசிய நடிகர் தனுஷ் 'ராசாவே உன்ன காணாத நெஞ்சு' பாடலை மனமுருகி பாடி அஞ்சலி செலுத்தினார். அதனை அங்கு வந்திருந்த ரசிகர்களும் அவருடன் சேர்ந்து பாடி விஜயகாந்திற்கு அஞ்சலி செலுத்தினர். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actor dhanush tribute to captain vijayakant


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->