வரும் ஜனவரி ஒன்றாம் தேதிமுதல் உங்கள் ஏடிஎம் கார்டு., ரிசர்வ் வங்கியின் அனுமதியால் அதிரடியாக அறிவித்த வங்கிகள்.! - Seithipunal
Seithipunal


வருகின்ற ஜனவரி 1-ஆம் தேதி முதல், வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஏடிஎம் பரிவர்த்தனைக் கட்டணம் உயர உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

வருகின்ற ஜனவரி மாதம் 1-ஆம் தேதி முதல், இலவச பரிவர்த்தனைகளை தாண்டி ஏடிஎம் கார்டுகளை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களிடம் இருந்து, ஒரு பரிவர்த்தனைக்கு 25 ரூபாய் வசூலிக்கப்படும் என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது ஒரு வங்கி வாடிக்கையாளர், தங்கள் ஏ.டி.எம்.,களில் ஒரு மாதத்திற்கு 5 முறை கட்டணமின்றி பணம் எடுக்கலாம் என்ற முறை இருந்து வருகிறது. அதன்பிறகு அவர்கள் பணம் எடுத்தால் மற்றும் வங்கி கணக்கில் உள்ள பேலன்ஸ் செக் செய்தால்கூட ஜிஎஸ்டி உடன் 23 ரூபாய் 60 பைசா கட்டணமாக பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், இந்த கட்டணம் வரும் ஜனவரி 1-ஆம் தேதி முதல் உயர்த்திக்கொள்ள அணைத்து வங்கிகளுக்கும் மத்திய ரிசர்வ் வங்கி அனுமதி வழங்கியுள்ளது. 

இது குறித்து, மத்திய ரிசர்வ் வங்கி தெரிவிக்கையில், பரிமாற்ற கட்டணத்தை வங்கிகளுக்கு ஈடுகட்டவும், செலவுகள் அதிகரித்து இருப்பதாலும், ஏடிஎம் பரிவர்த்தனை கட்டணத்தை உயர்த்திக் கொள்ள அனுமதி அளித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

அதன்படி மாதாந்திர இலவச பரிவர்த்தனையை தாண்டி ஏடிஎம் மையங்களில் பயன்படுத்துவோருக்கு வருகின்ற ஜனவரி 1-ஆம் தேதி முதல் ஜிஎஸ்டி வரியுடன் சேர்த்து 25 ரூபாய் வசூலிக்கப்படும்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ATM Transection Charge Hike


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->