இந்தோனேஷியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்..!! 7.0 என்ற ரிக்டர் அளவில் பதிவு..!! - Seithipunal
Seithipunal


சமீபகாலமாக பல நாடுகளில் நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. அந்தமான் நிக்கோபார் தீவு பகுதிகளில் நேற்று காலை ரிக்டர் அளவில் 4.4 என நிலநடுக்கம் ஏற்பட்டது. அதனை அடுத்து 7 முறை தொடர்ந்து நிலநடுக்கம் ஏற்பட்டதால் அந்தமான் நிக்கோபார் மக்கள் இடையே பெரும் அச்சம் நிலவியது.

இந்த நிலையில் இன்று இந்தோனேஷியாவின் ஜாவா தீவின் வடக்கு பகுதியில் டூபன் என்ற இடத்தில் சற்று முன்னர் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் 7.0 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது.

உள்ளூர் நேரப்படி இன்று மாலை 4:55 மணிக்கு ஏற்பட்ட வலுவான நிலநடுக்கம் 594 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது எனவும், இதனால் சுனாமி ஏற்பட வாய்ப்பில்லை எனவும் இந்தோனேசியா அரசு அறிவித்துள்ளது.

இந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் வீடுகள், கட்டடங்கள்  குலுங்கியது. இதனால் இந்தோனேசியா மக்கள் அதிர்ச்சி அடைந்த நிலையில் வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். இந்த நிலநடுக்கத்தால் உயிர்சேதம் ஏதும் ஏற்படவில்லை என முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Powerful earthquake in Indonesia


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->